திருகோணமலையில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை!
திருகோணமலை கண்டி வீதி பெதிஸ்புர பிரதேசத்தில் தனிப்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக் கொலை சம்பவம் அதிகாலையில் இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கொலைச் சந்தேகத்தின் பேரில் 28 வயதுடைய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்த சிசிடிவி கெமராவில் இக் கொலை சம்பவம் பதிவாகியுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed